Sunday, March 14, 2021

சென்று வாருங்கள் எஸ்.பி.ஜனநாதன்!!!

💁 யார் இந்த இயக்குனர் எஸ் பி ஜனநாதன்?

பண்பாட்டிற்கும், கலாசாரத்திற்கும் பெயர் பெற்ற, நெற்களஞ்சியம் இருக்கும் புகழ்பெற்ற தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வடசேரி கிராமத்தில் பிறந்தவர் தான் இயக்குனர் எஸ் பி ஜனநாதன். 


தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த படத்தொகுப்பாளராக லெனின், இயக்குனர் பரதன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக இருந்து, சினிமாவைக் கற்றுக் கொண்டு, பயணிக்க ஆரம்பித்தவர் தான் இயக்குனர் எஸ் பி ஜனநாதன்.


முதல் படத்தில் தேசிய விருதை பெறுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஒன்று வலுவான கதை இருக்க வேண்டும். அல்லது நடிகர்களின் அழுத்தம் திருத்தமான நடிப்பு இருக்க வேண்டும். என்னதான் இருந்தாலும் கதையில் சிறிது தடுமாற்றம் இருந்தாலும், அந்தப் படம் பார்க்கப்படுமே தவிர திரும்பிப்பார்க்க படுவதில்லை. 


அப்படி ஜனநாதன் இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படம் தான் "இயற்கை". "வெண்ணிற இரவுகள்" என்கிற ஆங்கில நாவலை தழுவி உருவான திரைப்படம் தான் "இயற்கை". தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இதுவரை கண்டிராத பல காட்சிகள் பல திருப்பு முனைகளை அமைந்த கதைகள் படத்தில் இடம்பெற்றது. 
வித்யாசமான கடல் காதலை வெளிப்படுத்திய இத்திரை படம், பின்னாளில் இவருக்கு தேசிய பெற்றுத் தந்தது. ரசிகர்கள் படத்தை வெள்ளிவிழா வரை கொண்டு சென்று, சலிக்கும் வரை கொண்டாடி தீர்த்தனர், என்றே சொல்ல வேண்டும். 


தன் படங்களில் எளிய மக்களுக்கான அரசியலை சாட்டையடியாக தருவதில் கைதேர்ந்தவர் எஸ்பி ஜனநாதன். அப்படி அவர் பல நல்ல விஷயங்களை சினிமாவில் தொடர்ந்து கொடுத்தார். 


அதற்கு ஆக சிறந்த உதாரணம்  ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை, ஆகிய படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதுவிதமான ஒரு அனுபவத்தை தந்தது ஜெயம் ரவி நடிப்பில் உருவான பூலோகம் படத்தில் தன் சாட்டையடி வசனங்கள் மூலமாக கார்ப்பரேட் அரசியலை கடுமையாக சாடினார். 


"லாபம்" படத்தை எடுத்து வெளியிடுவதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டு கொண்டிருக்கும் போதுதான், சிறிது உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இப்போது இம் மண்ணை விட்டு மறைந்து விட்டார். 


எஸ்பி ஜனநாதனுக்கு ஒரு கனவு இருந்ததாக, தனது நண்பர்களிடம் சொல்லிக் கொண்டே வந்திருக்கிறார்... தஞ்சை பெரிய கோவிலை மையமாக வைத்து ஒரு கனவு திரை படத்தை எடுக்க  திட்டம் தீட்டி இருந்தார். அது முடியாமல் போய்விட்டது. 


அதனால் என்ன? அவருடைய பட்டறையில் உருவாகிக் கொண்டிருக்கும் இளம் இயக்குனர்கள், அவரது கனவு திரைப்படத்தை உருவாக்கி, அவரது ஆன்மா சாந்தி அடைய முயற்சிப்பார்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. 


தமிழ் சினிமாவில் ஒரு வருடத்தில் பல படங்களை எடுக்கும் இயக்குநர்களுக்கு மத்தியில், ஒரு வருடத்தில் 5 படங்களுக்கும் மேல் நடிக்கும் நடிகர்களுக்கு மத்தியில், 18 வருடங்களாக சினிமாவில் இயங்கி, மக்களுக்கு தேவையான விஷயங்களை மையமாக வைத்து, வெறும் ஆறு படங்கள் மட்டுமே எடுக்கும் போதே தெரிகிறது, எஸ்பி ஜனநாதன் ஓர் உன்னத ரசனைக்காரன் என்பது... 


எல்லா தடைகளையும் தாண்டி, எல்லைகளையும் மீறி, சொற்பமான விரல் விட்டு எண்ணக் கூடிய படங்களை மட்டுமே தந்த எஸ் பி ஜனநாதன், காலம் கடந்து தமிழ் சினிமா கொண்டாட பட வேண்டிய ஒரு பொக்கிஷம். 


| 💖 செயற்கை உலகில் செயல்பட்டது போதும். இயற்கையோடு இயைந்து வாழுங்கள் எஸ்பி ஜனநாதன் அவர்களே.... 💖 |

Thursday, March 11, 2021

March 12, 2006. Aus Vs SA History ODI


💁 அடித்து நொறுக்கிய ஆஸ்திரேலியா. திருப்பி அடித்த தென் ஆப்பிரிக்கா.

2006 மார்ச் 12, கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சர்யம், அதிர்ச்சி, கலந்த, பரபரப்பான ஒரு நாள். சரித்திர சாதனைகள் படைத்திட்ட ஒரு நாள் இது. அன்று நடந்த இந்த சாதனையை,  எந்த அணியாலும் இன்றளவும் நெருங்க முடியவில்லை. காரணம் அப்படிப்பட்ட ஒரு வரலாற்று சிறப்பு மிக்க சாதனை அது.

மார்ச் 12, தென் ஆப்பிரிக்காவில் உள்ள உலகப்புகழ் பெற்ற இயற்கை எழில் கொஞ்சும் ஜோகன்னஸ்பர்க்கில், ஆஸ்திரேலியா Vs தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆரம்பம் ஆகிறது. ஒரு பக்கம் வீரர்கள் போட்டிக்கு தயாராகி கொண்டிருந்தனர். மறுபக்கம் பார்வையாளர்கள் சாரை சாரையாக வந்து கொண்டிருந்தனர்.

 

இயற்கை எழில் கொஞ்சும் பின்னணியில் இருக்கும் இந்த ஸ்டேடியத்தில், அதிகபட்சமாக வெறும் 28,000 பேர் மட்டுமே அமர்ந்து போட்டியை கண்டுகளிக்க முடியும். அதனால் அரங்கம் நிரம்பி வழிந்தது. அன்று வந்த ரசிகர்களுக்கு தெரியாது, இந்த மைதானம்  ஒரு வரலாற்று சிறப்புமிக்க, ஒரு நாளை இந்த மைதானம் எழுதப் போகிறது என்று....

 

அப்போதைய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங் மற்றும் தென்ஆப்பிரிக்க கேப்டன் ஸ்மித் ஆகியோர் Toss போட வருகிறார்கள்.  ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய அறிவிக்கிறார்கள்.

 

எதிர் அணியினரை தன்னுடைய மிடுக்கான பார்வையாலும்,  துறுதுறுப்பான பேட்டிங்காலும் மிரளவைக்கும் ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் சைமன் காட்டிச் இருவரும் உள்ளே வருகிறார்கள். வழக்கம் போல ஆடும் தன்னுடைய அதிரடியான ஆட்டத்தை முதல் Ball முதலே ஆரம்பிக்கிறார் கில் கிறிஸ்ட். அதன் பலனாக 44 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து அவுட்டாகி வெளியேறுகிறார். என்ன ஆச்சரியம் எனில், கில் கிறிஸ்ட் சிக்ஸர் அடிக்காமல் ஒன்பது Four-களை  மட்டும் அடித்து விட்டு சென்றது பலருக்கும் ஆச்சரியம்.

 

முதல் விக்கட் வீழ்த்திய தென்ஆப்பிரிக்க வீரர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் பொழுது, அவர்களுக்கு தெரியவில்லை, அடுத்த தலைவலி ரிக்கி பாண்டிங் என்று.... ஆம், கேப்டன் என்ற கூடுதல் பொறுப்போடு உள்ளே வருகிறார் பாண்டிங். முதல் பந்திலேயே விறு விறுவென்று அடிக்க தொடங்குகிறார். அப்போதைய வேகப்பந்து வீச்சாளரான மக்காயா நிதினி, மித வேகப்பந்து வீச்சாளரான ஜாக் காலிஸ் உள்ளிட்ட பந்துவீச்சாளர்களை ஒரு பதம் பார்க்கிறார். எல்லா பந்துகளையும் போர், சிக்ஸர் என தெறிக்க விடுகிறார்... ஒரு கட்டத்தில் "இந்தாளுக்கு கில் கிறிஸ்ட் தேவலாம் போல" என தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் குமுற தொடங்கினர்.

அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிக்கி பாண்டிங்,154 நிமிடங்கள் களத்திலிருந்து, 105 பந்துகளை சந்தித்து 164 ரன்களை அடித்து அணியின் ரன் ஜெட் வேகத்தில் உயர அடித்தளம் இடுகிறார் இதில,13 போர்களும் 9 Sixer-ம் அடக்கம்.

 

இமாலய Score ஏறுவதற்கு காரணமான பாண்டிங்கை அவுட்டாக்கியதும், தென் ஆப்பிரிக்க பவுலர்களுக்கு பெரிதாக மகிழ்ச்சி இல்ல. ஆனாலும் ஒரு சின்ன நிம்மதி. ஆனால், இங்கு தான் நாம் கவனிக்க வேண்டும். அடுத்தது இன்னமும் அவர்களுக்கு தெரியவில்லை மைக் ஹசி உள்ளே வருவார் என்று....

 

துள்ளிக் கொண்டு வேக வேகமாக உள்ளே வருகிறார் மைக் ஹசி. நாலாபறங்களிலும் எதிர் அணியின் பந்துகளை  பறக்க விடுகிறார். தன் பங்குக்கு 51 பந்துகளில் 81 ரன்கள் குவித்து திருப்தியாக வெளியே செல்கிறார்.

 

இறுதியாக ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து, 50 ஓவர்கள் முடிவில் 434 என்ற ஸ்கொரை பதிவு செய்கிறார்கள். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா 500 ரன்கள் அடித்து சாதனை படைப்பார்கள் என்று ரசிகர்கள் என்ன தொடங்கினார்... காரணம் அந்த அளவுக்கு அவர்களின் ஆக்ரோஷமான ஆட்டம் இருந்தது.

 

இறுதியாக, வென்றுவிடலாம். இந்த ஸ்கோரை தென்னாப்பிரிக்கா சேஸ் செய்ய முடியாது என்று 100% நம்பிக்கையுடன் பவுலிங் செய்ய வருகிறார்கள் ஆஸ்திரேலியா வீரர்கள். வழக்கம் போல் சிரித்த முகத்துடனும், சத்தம் அடித்த மகிழ்வுடனும் ரிக்கி பாண்டிங் காணப்படுகிறார்.

 

யாரையும் கிள்ளுக்கீரையாக நினைக்க கூடாது என்பதை எடுத்துரைக்கும் வகையில், தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் ஸ்மித் மற்றும் Boeta Dippenaar ஆகியோர் களம் இறங்குகிறார்கள்.. ஆஸ்திரேலியா அணியின் சார்பில், முதல் ஓவரை வீச அன்றைய, அந்த அணிந்த உயரமான வீரர் நாதன் பிராக்கன் தயாராகிறார். மூன்றாவது பந்தில் தென்னாப்பிரிக்கா அணிக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான ஒரு ரன்னில் ஸ்டம்புகள் சிதற வெளியேறுகிறார்.

 

அடுத்தது அந்த அணியின் மூத்த வீரர் கிப்ஸ் களமிறங்குகிறார். முதல் ஓவரிலேயே வந்ததால், ஒரு சின்ன பதட்டம். வெற்றி முனைப்பில் இருந்த ஆஸ்திரேலிய அணிக்கு, அங்குதான் பிரச்சனை ஆரம்பமானது. அடுத்ததாக வந்த தென்ஆப்பிரிக்க அணியின் மூத்த வீரர் கிப்ஸ் ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர்களை ஒரு "கை" பார்க்க தொடங்குகிறார். 42 நிமிடம், காலத்தில் நின்று, 111 பந்துகளை சந்தித்து 175 ரன்கள் அடித்து அவுட் ஆகிறர். அப்போது ஏறக்குறைய தென் ஆப்பிரிக்காவின் வெற்றி உறுதியாக இருந்தது.

 

ஒருபக்கம் நங்கூரம் போல் களத்தில் நிலைத்து நின்று அதிரடி காட்டிய கேப்டன் ஸ்மித், 90 ரன்களுடன் வெளியேறினார்.  இருவரும் சேர்ந்து ஆட்டத்தின் போக்கை மாற்றியது, பின்வரிசைவீரர்களுக்கு வெற்றிக்கு கனியை தொட்டு பறிக்க எளிதாக இருந்தது. நிறைவாக தென்னாப்பிரிக்கா அணி 9 விக்கெட்டுகளை இழந்து, ஒரு பந்தை மீதம் வைத்து 438 ரன்கள் அடித்து கிரிக்கெட் சகாப்தத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதுகிறார்கள்.

ஒரு பந்து மீதம் இருக்கும் நிலையில் ஒட்டுமொத்தமாக 100 ஓவர்களில் இரு அணி வீரர்களும் சேர்ந்து 872 ரன்களைக் குவித்து புதிய சாதனை படைத்தனர். ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங் சிறந்த ஆட்டக்காரருக்கான விருதை பெறுகிறார். 

 

ஒட்டுமொத்தத்தில் இரு அணி வீரர்களுக்கும் இதில் மகிழ்ச்சி. ஒரு வரலாறு எழுதப்படும் பொழுது எப்படி மகிழ்ச்சி அடைகிறோமோ அப்படித்தான் இருவரும் அணி வீரர்கள் களத்தில் நின்று இருந்தனர். ஆனால் இவ்வளவு பெரிய Score-ரை தென்ஆப்பிரிக்க வீரர்கள் கூட்டாக சேர்ந்து Chase செய்து விட்டார்களே என்ற ஆதங்கம், ஒவ்வொரு ஆஸ்திரேலிய அணி ரசிகர்களுக்கும் இன்றளவும் இருக்கத்தான் செய்கிறது.

 

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், ஒரு முறை இப்படியாக குறிப்பிடுகிறார். "சாதனைகள் என்பது முறியடிக்க முடியாது என்று சொல்வது முட்டாள்தனம். யாரோ ஒருவர், யாரோ ஒருவரின் சாதனையை முறியடிக்கத் தான் செய்வார்கள். சாதனைகள் நிரந்தரமானது அல்ல. கிரிக்கெட்டைப் பொறுத்தவரை", என்று சொல்லுவார்.

 

அவர் சொல்வதும் சரிதான். ஆனால் 2009ம் ஆண்டு, அதாவது மூன்று வருடங்களுக்குப் பிறகு இலங்கை அணி இந்தியாவை சேஸ் செய்தது. ஆனால், அப்போது 411 ரன்கள் சேர்த்து அடுத்த இடத்திற்கு முன்னேறியது. அன்று முதல் இன்று வரை,  இலங்கை தற்போது இரண்டாம் இடத்தில் இருந்தாலும், இன்றளவும் சாதனைகள் இன்றளவும் எந்த அணியாலும் இதை முறியடிக்க முடியவில்லை.

 

|நாடு கடந்து, மொழி கடந்து, கிரிக்கெட்டை நேசிக்கும் கிரிக்கெட் காதலர்களுக்கு, இந்த சாதனை எப்பொழுதும் மனதில் நிற்கும்|

 

Wednesday, March 10, 2021

மருத்துவம் - Medicine

https://spiritualsidha.blogspot.com/2021/03/salt-sugar.html

https://ajfstudio1.blogspot.com/2021/03/medical.html

ADMK கொடியை, காமெடி நடிகர் பி.பாண்டு உருவாக்கினாரா?

💁 பி .பாண்டு என்றொரு, தென்னகத்து ஜேம்ஸ் "பாண்டு"

பொதுவாக ஜேம்ஸ் பாண்டு படங்கள் என்றால், அதிரடி திருப்பங்கள் இருக்கும். காதல்  நகைச்சுவை, சண்டை, வில்லத்தனம், வீரம், விவேகம் என அனைத்தும் கலந்து கட்டி இருக்கும். அப்படி தான் நம்மூரு பி.பாண்டுவுக்கும் பல திறமைகள் வரிந்து கட்டி நிற்கும். போட்டி போட்டு கொண்டு ஓடிக் கொண்டிருக்கும் இந்த கலையுலகில், நடிப்போடு சேர்த்து பல கலைகளையும், திறமைகளையும் வளர்த்துக் கொண்டு, தன்னை நிலைப் படுத்திக் கொண்டவர் தான் இந்த Comedy Actor பி.பாண்டு. 

பி.பாண்டு என்ற நகைச்சுவை நடிகர் இவ்வளவு திறமை பெற்றவரா என கண்டிப்பாக யோசிப்பீர்கள்... இந்த பதிவை முழுவதும் பாருங்கள்.

 

பொதுவாக மிமிக்ரி செய்யும் அனைவருக்கும், எளிதில் வரும் குரல் தோரணை, நம்ம கட்டுரையின்  கதாநாயகன் பாண்டு அவர்களுடையது தான்... காரணம் ஒரே வார்த்தை தான்... |""""ஆங்""|. சற்றும் சிரமமே இல்லாமல், தனது குரல் போல் மிமிக்ரி செய்து, மேடைகளில் அசத்தி வரும் பலருக்கும், வாழ்க்கை  கொடுத்தவர் பி.பாண்டு.

 

இவரது இளமை காலத்தில் இருந்தே, ஓவியம் வரைவது பிடித்து இருந்தது. ஆனாலும், தனது அண்ணன்  இடிச்ச புலி செல்வராசுசினிமாவில் நடித்துக் கொண்டிருந்ததால், சினிமாவில் நுழைவது ஈசியாக இருந்தது. என்ன தான் படங்களில் நடித்தாலும், வரைவது, எழுதுவதில் தான் அதிக ஆர்வம் இருந்தது. படங்களில் நடித்தது போக, மீதி இருந்த நேரத்தில் வரைவதிலும், லோகோவை காமெடியாக சித்தரிப்பதிலும் குறியாக இருந்துள்ளார்.

 

சிவாஜி கணேசனும், எம்.ஜி.ஆர் அவர்களும் நடித்து புகழின் உச்சத்தில் இருந்த காலக் கட்டத்தில், அவர்களை வைத்து ஒரு கேலி சித்திரத்தை பாண்டு வரைகிறார். எப்படியோ அந்த சித்திரம் எம்.ஜி.ஆர் அவர்களின் பார்வைக்கு போக, உடனே தலைவர், "அழையுங்கள் பாண்டுவை" என்று உத்தரவு போடுகிறார்.


கண்டிப்பாக தன்னை எம்.ஜி.ஆர், அந்த கேலி சித்திரத்திற்காக வெகுவாக பாராட்டுவார்  என்று எண்ணி போகிறார். ஆனால், எம்.ஜி.ஆர், கடுமையாக திட்டுகிறார் பாண்டுவை. கணேசன் நம்மை பற்றி என்ன நினைப்பார்? தப்பு இல்லையா? இந்த மாதிரி கேலி சித்திரம் வரையாதே, என கடிந்து அனுப்பி வைத்தார்.

 

அடுத்த சில நாட்களில், வேறு ஒரு கேலி சித்திரம் வரைந்து, எம்.ஜி.ஆர் அவர்களிடம் பாராட்டை பெறுகிறார் பாண்டு. இப்படி அன்று தொடங்கிய அவரது இந்த ஆர்வம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தது. முறைப்படி ஓவியத்தை கற்றுக் கொண்டு ஓவியத்தில் முனவைர் பட்டமும் பெறுகிறார். 


தமிழகத்தில் ஓவியத்தில் முனைவர் பட்டம் (Phd) பெற்ற முதல் ஆள், நம்ம நகைச்சுவை நடிகர் பி.பாண்டு தான் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? ஆனால், அது தான்  உண்மை. ஆகச்சிறந்த ஓவியங்களை வரைந்து, இன்னமும் பத்திரப்படுத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 எம்.ஜி.ஆர். மற்றும் கருணாநிதி ஆகியோர், தனி தனியே கட்சியை ஆரம்பித்து, அதற்கு கொடியை வடிவமைக்கும் பணியில் இங்குகின்றனர். அப்போது பாண்டு அழைக் -கப்படுகிறார். ADMK கட்சி கொடியின் நடுவில், இருக்கும் "அண்ணா" படத்தை வேறு மாதிரியாக வரையும் பொறுப்பை ஒப்படைக்கிறார்கள். கொஞ்சமும் யோசிக்காமல், அன்று அவர் வரைந்து கொடுத்தது தான், இன்று இருக்கும் AIADMK கொடி. 

அதாவது அந்த கட்சியின் கொடியின் நடுவில் அறிஞர் அண்ணா அவர்களின் ஓவியம் இருக்கும். அதை வரைந்து கொடுத்தது நம்முடைய நகைச்சுவை நடிகர் பி.பாண்டு. 

 

இப்படி பல திறமைகளை ஒருங்கே பெற்ற இந்த பி.பாண்டு,1970-ஆம் ஆண்டு "மாணவன்" படத்தில் அறிமுகமாகி பின்னாளில், உள்ளத்தை அள்ளித்தா, காதல் கோட்டை, ஏழையின் சிரிப்பில், வில்லு, மொட்ட சிவா கெட்ட சிவா, உள்ளிட்ட நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார். 

 

"வெள்ளித்திரையில் மின்னும் பல பிரபலங்களுக்கு, அதையும் தாண்டிய திறமைகள் இருக்கத் தான் செய்கிறது. அதை சரியான நேரத்தில், சரியான இடத்தில், பொருத்திக் கொண்டவர்களுக்கு, உலகம் எப்போதும் சிகப்பு கம்பளம் அமைத்து கொடுக்க தவறியது இல்லை என்பதே உண்மை. இது நகைச்சுவை நடிகர் பி.பாண்டுவுக்கும் பொருந்தும்.  

Tuesday, March 9, 2021

மார்ச் 10, Osama bin Laden பிறந்த தினம்.

💁  வெள்ளை  உலகின் தொல்லை  தலைவன் "பின் லேடன்"

உலகில் பல தீவிரவாதிகளை உற்பத்தி செய்த, ஒரு முதல் தீவிரவாதி, உற்பத்தியான தினம் இன்று. ஆம், உலகை நடுங்க வைத்த ஒசாமா பின் லேடன் பிறந்த தினம் இன்று. இஸ்லாம் என்றொரு உன்னத மதத்தில் பிறந்த ஒஸாமாவுக்கு, ஏன் இந்த மட்டமான  "தீவிரவாதம்" சிந்தனை? அமெரிக்காவை  ஏன் இவன் தர்க்க வேண்டும்? கடைசி நாளில் நடந்தது என்ன? போன்ற சில முக்கியமான நிகழ்வுகளை தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.


ஒசாமாவின் பிறப்பே விசித்திரம் நிறைந்தது. துபாயில் பெரும் கோடீஸ்வரருக்கு கிட்டத் தட்ட 52 பிள்ளைகள் பிறக்கின்றனர். அப்படியென்றால் ஒசாமாவின் அப்பாவிற்கு என்ன தான் வேலை என்ற கேள்வி எழலாம். அனைத்தும் ஒரே மனைவிக்கு பிறக்க வாய்ப்பில்லை என்பது நான் சொல்லி தெரியவேண்டிய அவசியமில்லை. அப்படி பிறந்த 52 பேரில், 17வது மகனாக பிறந்தவன் தான் இந்த ஒசாமா. ஆம், 1957 ஆம் ஆண்டு மார்ச் 10-ஆம் தேதி பிறக்கிறான்.

அப்பா எட்டடி பாய்ந்தால் மகன் 16 அடி பாய்வான், அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறது, என்பதெல்லாம் தமிழ் பழமொழி மட்டுமல்ல. உலக முது மொழி. ஒசாமாவின் அப்பா தீவிரவாத இயக்கத்தை ஆதரித்து கோடிக்கணக்கான சொத்துக்களை கிள்ளி கொடுக்காமல் அள்ளி கொடுக்கிறார். அதே நேரத்தில் அமெரிக்காவை அழிக்க முற்படுகிறார். இதை பார்த்து வளர்ந்ததாலவோ என்னவோ, ஒசாமாவின் சிந்தனையும் நாளுக்கு நாள் அதை நோக்கியே நகர்கிறது.

 

தனது 41-வது வயதில் தனது அப்பாவிடம் இருந்து விடைபெற்று, அதாவது 1998-ஆம் ஆண்டில் “அல்-கொய்தா” என்ற அதி தீவிரமான, தீவிரவாத  இயக்கத்தை தொடங்குகிறான். பல இளைஞர்களை அதில் பயிற்சி கொடுத்து இனைக்கிறான். நாளுக்கு நாள் அவனது இந்த இயக்கம் வெளி உலகுக்கு தெரிய வருகிறது. தனது தந்தையின் என்னமான அமெரிக்காவை குறி வைக்கிறான்.

 

அதற்கு நாள் குறிக்கிறான். செப்டம்பர் 11, 2001 ஆம் ஆண்டு, உலகின் மிகப்பெரிய நாடான அமெரிக்கா இவனின் இந்த படுபாதக செயலை எண்ணி கூட பார்த்து இருக்காது. பல நாள் உளவு பார்க்கிறான். எந்த இடம் அமெரிக்காவின் மைய புள்ளி, எதை தகர்த்தால், அமெரிக்காவின் இதயம் சுக்கு நூறாக நொறுங்கும்?. எதை தொட்டால், அது மீண்டு எழ பல ஆண்டுகள் ஆகும்? என, கத்தி பட பணியில் ஸ்கெட்ச் போடுகிறான்.

அதன் படி 2001, செப்டம்பர் 11 அன்று, யாரும் எதிர் பார்க்காத நேரத்தில் உலக வர்த்தக மைய்யத்தை மனித வெடிகுண்டு மூலம் முதலில் தகர்க்கிறான். அந்த பரபரப்பும், அபயக் குரல் அடங்கும் முன்பே, அடுத்தது வேறு திசை நோக்கி தனது எண்ணத்தை விதைக்கிறான். இம்முறை அவன் தொட்டதும் சுட்டதும் பெண்டகன். அதாவது ராணுவ தலைமையிடம். கண்ணிமைக்கும் நேரத்தில் அனைத்தையும் முடித்து விட்டு, மீண்டும் பதுங்கி கொள்கிறான். சற்று நேரத்தில், இந்த தாக்குதலுக்கு அல்-கொய்தா அமைப்பு பொறுப்பேற்கிறது என்று அறிக்கை விட்டான்

 

அன்று முதல் அமெரிக்காவின் மிகப்பெரிய கோபாக்கினைக்கு உள்ளாகிறான். இஸ்லாமாபாத், பாகிஸ்தான் என வலை வீசி தேடுகின்றனர். ஒரு கட்டத்தில் அப்போதைய ஜனாதிபதியான ஜார்ஜ் W புஷ் அவர்களிடம் நிருபர்கள் கேட்கின்றனர். ஒசாமாவை வீழ்த்த முடியுமா என்று? ஆனால் அவன் உயிருன் வேண்டும் என்கிறார் புஷ்.

 

கிட்டத்தட்ட 10 வருட தேடுதல் வேட்டைக்கு பிறகு, கராச்சியில் உள்ள ஒரு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதாக அமேரிக்கா உளவுத் துறைக்கு தகவல் பறக்கிறது. விடுவார்களா? எதற்கு இத்தனை நாள் காத்துக்கிடந்தோமோ அதுவே கைக்கு கிடைத்தால் விடுவோமா? என்கிற அளவில், தனது படைகளுடன் கராச்சி விரைகிறது அமரிக்க ராணுவம். கண்ணிமைக்கும் நேரத்தில் சல்லடை போட்டு சலித்து, அள்ளி முடிந்து எடுத்து சென்றது ஒசாமாவின் உடலை....

 

அத்தோடு அவனது சகாப்தம் முடிவுக்கு வருகிறது. ஆனால், முன்னதாக ஒரு கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்த ஒசாமா, தனது நுண்ணறிவால் நேர்மையான முறையில் செயல் பட்டிருக்கலாம். ஆனால், “பட்டயத்தை எடுத்தவன் இறுதியில் பட்டயத்தால் தான் மடிவான்” என்ற சொல்லுக்கேற்ப, எந்த ஆயுதத்தை கையில் எடுத்தானோ, அதே ஆயுதத்தால் வீழ்த்தப்பட்டது தான் காலத்தின் கட்டாயம்.

 

இந்தியாவை ஆண்ட குரு நில மன்னர்கள் எப்படி சில பல, சமஸ்தானங்களை சமயம் கிடைக்கும் போது தங்களுடன் இணைத்துக் கொண்டார்களோ, அப்படி தான் ஒஸாமாவும், ஏமன், எத்தியோப்பியா போன்ற உலக நாடுகளில் உள்ள சிறு சிறு தீவிரவாத இயக்கங்களை, தனது இயக்கத்துடன் இணைத்துக் கொண்டு மார் தட்டினான். வர மறுப்பவர்களை மிரட்டினான். பண பலம், ஆள் பலம் என தன் வாழ் நாளில் பெரும் செல்வாக்கோடு வலம் வந்தான். ஆனால், இறுதியில் முடிவு வேறு மாதிரி மாறி விட்டது.

 

உலகின் பெரும் தீவிரவாதியாக ஒசாமாவின் மரணம், பிற தீவிரவாத இயக்கங்களுக்கு, இந்த சம்பவம் பெரும் படிப்பினையை கொடுத்தது. இப்போதும் உலகம் முழுவதும் தீவிரவாதம் இருக்கிறது என்றாலும், முன்பு இருந்த அளவை விட குறைந்துள்ளது என்பதே நிதர்சனமான நிஜம்.

 

||| இறுதியாக, ஒரு பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது. "வெள்ளை பூக்கள் உலகம் எல்லாம் பரவட்டும்".!!! அமைதி நிலவட்டும்!!!


Monday, March 8, 2021

Harry & Meghan | பிரிட்டிஷ் தம்பதியால் பரபரப்பு!

 Harry & Meghan | இனவெறியால் ஒதுக்கப்பட்டனரா?

காதலுக்கு கண் இல்லை என்பதை, பல்வேறு தருணங்களில் பல்வேறு சம்பவங்கள் நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கின்றன.  காதலுக்கு இதுதான் எல்லை என எதையும் வரையறுத்து, நிலைநிறுத்தி கொள்ள முடியாது. அப்படித்தான் இங்கிலாந்தை சேர்ந்த அரச குடும்பத்தின் புதல்வன் ஹாரி மற்றும் நீல வண்ண படங்களில் நடித்து புகழ்பெற்ற மேகன் தம்பதியின் காதல்.

ஹரியும் மேகனும் காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தனிப்பட்ட முறையில் எங்கோ ஒரு மூலையில் வைத்து இவர்களின் திருமணம் நடக்கவில்லை... அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் முன்னிலையில் அவர்களின் சம்மதத்தோடு திருமணம் நடந்து முடிந்தது.  

 

திருமணம் முடிந்து தம்பதிகள் மகிழ்ச்சியாய் தங்களது வாழ்க்கையை அரச மாளிகையில் வாழத் தொடங்கும்போது, அங்கே தான் பிரச்சனை வெடிக்கிறது.

 

இதற்கு இடைப்பட்ட தூரத்தில், Haari மற்றும் மேகன் தம்பதிக்கு, அழகான ஆண் குழந்தை பிறக்கிறது. பிறகு நாட்கள் ஆக ஆக, தான் ஒரு அரச குடும்பத்தை சேர்ந்தவர் என்பதை மறக்கும் எண்ணம் அதிகரித்தது ஹாரிக்கு... அடுத்தடுத்த நாட்களில் இளவரசர் ஹாரி குடும்பத்தில் இருந்தே புறக்கணிக்கப் படுகிறார். தனது பாதுகாப்புக்கு தானே தொகையை செலவிடும் நிலை ஏற்படுகிறது.

 

இவர், தனது அப்பா சார்லஸ் அவர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டாலும், அவர் போனை எடுப்பது இல்லை. பல்வேறு வித அழுத்தம் காரணமாக, இளவரசர் ஹாரி அரச குடும்பத்தில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார்.

இங்கிலாந்தில், அதுவும் அரசு குடும்பத்தில் என்ன நடக்கிறது என்று ஊடகங்கள் பல்வேறு வகையில் கேள்விகள் எழுப்பத் தொடங்கினர். அந் நாட்டின் இளவரசர் ஹரிக்கு பாதுகாப்பு இல்லை எனும்போது, நாட்டு மக்களுக்கு எப்படி பாதுகாப்பை ஏற்படுத்தி தர முடியும் என்று ஊடகங்கள் கொந்தளிக்க தொடங்கின. எதையும் கண்டுகொள்ளாமல் அங்கிருந்து வெளியேறி விட்டனர் ஹரி & மேகன் தம்பதி.

 

தற்போது ஒரு தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் இருவரும் கூட்டாக சேர்ந்து பல்வேறு திடுக்கிடும் உண்மைகளை அம்பலப்படுத்தினார்... அதில் தான் பிரசவிக்க போகும் குழந்தை, கருப்பு இன குழந்தையாக இருக்கும் என்று அரச குடும்பத்தினர் மிகவும் கவலை பட்டதாகவும், அவர்கள் கொடுத்த அழுத்தம் தன்னை தற்கொலையின் எல்லைக்கே தூக்கி சென்றதாகவும், கடும் வார்த்தைகளை கொட்டியுள்ளார்.

 

ஹரி & மேகன் தம்பதி, தனது ஆண் குழந்தையுடன் தற்போது கலிபோர்னியாவில் வசித்து வருகின்றனர். அரச குடும்பத்தை சார்ந்த இவர்களுக்கே இந்த ஒரு நிலை என்று பத்திரிக்கைகள் அதிக அளவில் விமர்சனம் செய்யத் தொடங்கியுள்ளது. ஆனால், இதற்கு இங்கிலாந்தை சேர்ந்த அரசர் குடும்பம் எதுவும் பேசாமல் மவுனம் காத்து வருகின்றனர்.

 

காதலுக்கு ஆதரவு தெரிவித்து, சமீபத்தில் உலக அளவில் காதலர் தினத்தை கொண்டாடி முடித்து இன்னும் ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், ஒரு பெரும் அரச குடும்பத்தை சேர்ந்த வாரிசு தம்பதிக்கு, இப்படி ஒரு காதல் எதிர்ப்பு நிலை எனும்போது, இவ்வுலகத்தில் கண்ணுக்குத் தெரியாமல் எத்தனை காதல் எதிர்ப்புகள் தொடர்ந்து அரங்கேற்றம் ஆகிக்கொண்டு வருகிறதோ என்ற ஐயம் வெளிப்படுகிறது. 


உலக நாடுகளை ஆரம்ப காலத்தில் ஆட்டிப்படைத்து சர்வாதிகாரம் செய்த பிரிட்டிஷ் அரசாங்கத்தை, தற்போது மீடியாக்கள் கேள்விகள் கேட்டு துளைத்து ஆட்டிப்படைத்து வருவது தான் காலத்தின் விளையாட்டு!!!

Sunday, March 7, 2021

மார்ச் 8, "யாதுமாகிய பெண்கள்"

💁 புகைப்படத்தை மட்டும் பார்த்து விட்டு, கடந்து போனால், இது உங்களுக்கான பதிவு அல்ல!!!

இந்த புகைப்படத்தைப் பார்த்த பிறகு நீங்கள் நிறைய எதிர்மறை அல்லது தவறான எண்ணங்களை மனதில் வைத்துக் கொள்ளலாம், ஆனால் இந்த புகைப்படத்தின் உண்மையை அறிந்த பிறகு உங்கள் கண்களில் கண்ணீர் வரக்கூடும்.


என்னை மிகவும் ஈர்த்த புகைப்படம். நானும் முதலில் குழம்பினேன்.கண்டிப்பாக முழுசா படிங்க…


ஐரோப்பிய நாட்டில் , பெரோ என்னும் பெண்ணின் தந்தையான சிமோன் என்பவர் சிறையில் அடைக்கப்பட்டு பட்டிணிக்கு உள்ளாக்கப்பட்டு மரண தண்டணைக்கு ஆளாக்கப்பட்டார். அவர் இறக்கும் வரை சிறையில் வைக்கப்படுவார், மற்றும் அவர் எதையும் சாப்பிடவோ குடிக்கவோ அனுமதிக்கபடமாட்டார்.


புதிதாகப் பிறந்த குழந்தையின் தாயான அவரது மகள், இறக்கும் வரை தினமும் தனது தந்தையை சந்திக்க அனுமதிக்குமாறு அரசாங்கத்திடம் மன்றாடினார். அவள் அனுமதிக்கப்பட்டாள். அவள் சாப்பிடக்கூடிய எந்தவொரு பொருளையும் கொண்டு வர முடியாதபடி காவலர்களால் சோதனை செய்யப்பட்டாள்.


தன் தந்தையின் நிலையை தினசரி அப்படி பார்க்க மனம் இல்லாமல் வருந்தினாள். ஒரு அக்கறையுள்ள தாய் பசியுள்ள தன் மகனை எப்படி பார்பாலோ அப்படி பார்த்தால் அவள் அப்பாவின் கண்களில்.


எனவே, அவரை உயிருடன் ஆக்குவதற்காக, தினசரி அடிப்படையில் அவருக்கு தாய்ப்பாலை உணவளிக்கச் செய்தாள். பல நாட்களுக்குப் பிறகு, முதியவர் இறக்காதபோது, ​​காவலர்கள் சந்தேகம் வந்தது, எப்படி இந்த முதியவர் இன்னும் உயிருடன் இருக்கிறார்.


பின்னர், ஜெயிலர் சுவாரஸ்யமான ஒன்றைக் கண்டுபிடித்தார். சிறையில் தந்தையை சந்திக்கச் சென்ற பெரோ இரகசியமாக அவரின் அப்பாவின் உயிரைக்காக்க அவருக்கு தாய்ப்பால் ஊட்டினாள். அவளின் இச்செயல் சிறை அதிகாரியால் கண்டுபிடிக்கப்பட்டது.


ஆனால் அவளின் தந்தையின் உயிரைக்காக்க அவர் செய்த இச்செயல் அதிகாரிகளைக் கவர்ந்தது தன்னலமற்ற செயலால் ஜெயிலரின் இதயத்தை வென்றாள். இதனால், இந்த முடிவுகள் அதிகாரிகள் ஈர்க்கப்பட்டு அவர்கள் தந்தையை விடுவித்தனர்.


|||"பெண் ஒரு விலை மதிக்கமுடியாத பொக்கிஷம். எங்கும், எதிலும் யாதுமாகி நிற்கும் மங்கயற்கரசிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்".|||

சென்று வாருங்கள் எஸ்.பி.ஜனநாதன்!!!

💁 யார் இந்த இயக்குனர் எஸ் பி ஜனநாதன்? பண்பாட்டிற்கும், கலாசாரத்திற்கும் பெயர் பெற்ற, நெற்களஞ்சியம் இருக்கும் புகழ்பெற்ற தஞ்சாவூர் மாவட்டத்த...