Monday, February 22, 2021

"ஜெ.ஜெயலலிதா எனும் நான்"

👉"ஜெ.ஜெயலலிதா எனும் நான்" - பிப்ரவரி 24-2021

ஒருமுறை கர்ம வீரர் காமராஜர் தன்னுடைய நெருங்கிய நண்பர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போது இப்படியாக சொன்னாராம். "அத்தியாயங்கள் என்பது எழுதப்படுவதல்ல. சந்தர்ப்பத்தால் உருவாக்கப்படுவது" - என்று....

ஒருவேளை இதை உறுதியாக கோமளவல்லி நம்பினாரா? அல்லது இந்த வார்த்தைகளை உள்  வாங்கி கொண்டாரா? என்பது தான் ஆயிரம் டாலர் கேள்வி.

ஆம், வெள்ளித் திரையிலும், அரசியல் துறையிலும் பின்னாளில் தனக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை அணு அணுவாக உருவாக்க ஆரம்பித்தார். அந்த அத்தியாயங்கள் தான் "ஜெ.ஜெயலலிதா எனும் நான்" என கர்வம் பொங்க சொல்ல வைத்தது போலும். 

அரசியலை தாண்டி, அவரது ஆளுமைகளை ரசித்தவர்கள் ஏராளம் பேர். அது தான், அவரது இறப்பிற்கு எதிர் கட்சி தலைவர்களையும் கொண்டு வந்து சேர்த்தது. அப்படிப்பட்ட ஒரு பெண் தலைவரான முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் பிறந்த தினம் பிப்ரவரி 24. 

‘ஜெயலலிதா’ என்று எல்லோராலும் அழைக்கப்படும் அவரின் இயற்பெயர் கோமலவள்ளி. இவர் ஜெயராம் மற்றும் வேதவள்ளி தம்பதியருக்கு மகளாக மைசூர் என்ற இடத்தில் பிறந்தார். அவரது குடும்பம் அரச மைசூர் வம்சாவழியை சார்ந்தது. 

மைசூர் நீதிமன்றத்தில் அரச மருத்துவராக பணியாற்றிய அவருடைய தாத்தா, மைசூர் மன்னர் ஜெயசாமராஜெந்திரா உடையார் அவர்களின் சமூக இணைப்பைப் பிரதிபலிப்பதன் காரணமாக தனது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் முன்னொட்டாக ‘ஜெயா’ என்ற சொல்லை வழக்கமாக சேர்த்தார். 

ஜெயலலிதா அவர்கள் தனது இரண்டு வயதிலேயே தன் தந்தையை இழந்தார். அதன் பிறகு, அவரின் அம்மா மற்றும் தாய்வழி தாத்தா-பாட்டி வாழ்ந்த பெங்களூருக்குச் சென்றார். பெங்களூரில் தங்கியிருந்த அந்த குறுகிய காலத்தில், அவர் சில ஆண்டுகள் ‘பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலை பள்ளியில்’ கல்வி பயின்றார். வெள்ளித் திரையில் அவரது தாயாருக்கு நடிக்க வாய்ப்புக் கிடைத்ததால், அவர் சென்னை சென்றார்.

சென்னையிலுள்ள ‘சர்ச் பார்க் ப்ரேசெண்டேஷன் கான்வென்ட்டில்’ தனது கல்வியைத் தொடர்ந்த இவர், பின்னர் ‘ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில்’ தனது பட்டப்படிப்பை முடித்தார். தனது குழந்தை பருவத்திலிருந்தே, கல்வியில் சிறந்து விளங்கய ஜெயலலிதா அவர்கள், சட்டம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டார். 

ஆனால், விதி அவருக்கென்று வேறு திட்டங்கள் வைத்திருந்தது. குடும்ப நிதி கட்டுப்பாட்டின் காரணமாக, அவரது தாயார் அவரை திரையுலகில் நடிக்க வலியுறுத்தினார். 15 வயதில், அவர் ஒரு முன்னணி கதாநாயகனுடன் அறிமுகமானார். அதுவே அவருடைய புகழ்பெற்ற திரைப்பட தொழிலுக்கு ஆரம்பமாக இருந்தது.

“வெண்ணிற ஆடை” என்ற படம் மூலமாக தமிழ் திரையுலகில் அவரது நடிப்பைத் தொடங்கினார். அதன் பிறகு, அவர் தெலுங்கு சினிமாவில் தலை காட்ட தொடங்கினார். பின்னாளில் திரைத்துறையில் தனக்கென தனி முத்திரை பதித்தார் அம்மு.

அம்மு, எப்படி அம்மாவாக மாறினார் என்பது உலகமே அறியும். கரடுமுரடான அரசியல் வாழ்க்கையையும் மற்றவர்களுக்கும், தனக்கும் இருக்கும் வித்தியாசத்தை உணர வைத்தார். அரசியல் ஏந்த அளவு வெற்றிகளை பெற்றாரோ, அதற்கு நிகராக சவால்களையும் சந்தித்தார்.

எது எப்படி இருந்தாலும், செல்வி.ஜெயலலிதா அவர்களிடம் கற்றுக் கொள்ளவும், போற்றுக் கொள்ளவும் அதிகம் இருக்கிறது என்பதே நிதர்சனமான நிஜம். 

அம்மையார் இல்லாமல் போனால் என்ன? பல மனங்களில் இன்னும் வாழும், என்றும் வாழும் அவர்களுக்கு 74   வது பிறந்த நாள் வாழ்த்துக்களை பறைசாற்றுகிறேன். 


💁 பெப்ரவரி 23-2021 - செவ்வாய் கிழமை,  மாசி மாதம் 11-ம் தேதி

1861 – அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆபிரகாம் லிங்கன்  பால்ட்டிமோர், மேரிலாந்து பால்ட்டிமோர் நகரில் நடந்த படுகொலை முயற்சியை முறியடித்த பின்னர், வாசிங்டன், டி. சி.க்கு இரகசியமாக வந்திறங்கினார்.

1886 – சார்லஸ் மார்ட்டின் ஹால் முதலாவது செயற்கை  அலுமினியத்தை  உருவாக்கினார்.

1947 – சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.


இந்த நாளில் பிறந்து, இந்த நாளுக்கு சிறப்பு சேர்த்தவர்கள் :

1965 – மைக்கேல் டெல், அமெரிக்கத் தொழிலதிபர்.

டெக்சாசில் பிறந்தவரான டெல் ஒரு செல்வந்த யூத குடும்பத்தவர். அவர் தனது 7 வயதில் கால்குலேட்டர் வாங்கினார். தனது பதினைந்தாவது வயதில் தன்னால் முடியுமா என்பதைப் பார்ப்பதற்காகவே ஒரு புதிய அப்பிள் II கணினியை முழுவதுமாகக் கழற்றிப் பூட்டினார்.

1983 – பாக்யஸ்ரீ, இந்திய நடிகை

1983 – சக்தி வாசு, தமிழக நடிகர்

மாடு மேய்த்தவர், இயக்குநரா?

💁 யார் இந்த இயக்குனர் ஆர் வி உதயகுமார்?

கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தனது தந்தையுடன் மாடு மேய்த்துக் கொண்டிருந்தான் இந்த சிறுவன். பக்கத்தில் ஏதோ கோவில் திருவிழாவில், "ஆயிரம் நிலவே வா" என்ற எம்ஜிஆரின் பாடல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்த நேரம் அது. அட பாடல் அருமையாக இருக்கிறது. யாரோ ஒரு புது குரல் கேட்கிறது என்று அந்த சிறுவன் நினைத்து கொண்டிருந்த போதே, பாடல் முழுவதுமாக ஓடவில்லை. யாரோ நிறுத்தி விட்டார்கள். வேதனை பொங்க அங்கலாய்த்துக் கொண்டே ஆடுகளை மேய்க்க தொடங்கினான் இந்த சிறுவன்.

 காலம் கடந்தது, நாட்கள் நகர்ந்தது. சினிமா இயக்குனர் ஆகும் கனவுகளோடும்ஆசையோடும், சென்னை நகரை நோக்கி படையெடுத்த அந்த ஆடு மேய்த்த இளைஞர் தான் இயக்குனர் ஆர்.வி. உதயகுமார்.

 1990 ஆம் ஆண்டு அவருடைய இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் ராஜகுமாரன். அந்தப்படத்தின் ஒரு பாடலை தானே எழுதி முடித்து விட்டுஅதை இசையமைப்பாளர் இளையராஜாவிடம் கொடுக்கும்போது, அவரைக் கேட்கிறார், யார் பாட வேண்டும் என்று...

 அதற்கு இவர், எஸ் பி பாலசுப்பிரமணியம் பாடவேண்டும் என்று சொன்னாராம். உடனே இளையராஜா, அவன் அமெரிக்காவில் இருக்கிறான், வருவதற்கு ஒரு மாதம் ஆகும். என்று சொல்ல, உடனே ஆர்.வி உதயகுமார், பரவாயில்லை சார், அது ஒன்றும் பிரச்னை இல்லை. அவர் வரட்டும். அது வரை காத்துக்கிடக்கிறேன் என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டாராம். பிறகு,

ஒரு மாதம் கழித்து, மீண்டும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தாயகம் திரும்பிய போது, தனது பாடல் வரிகளை கொடுத்து, பாடலை பாட கேட்டுக் கொண்டுள்ளார். வரிகளை படித்து விட்டு ஆரத்தழுவி கொண்டாராம் எஸ்.பி.பி. 

மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது, துளியும் யோசித்து இருக்க மாட்டார் ஆர்.வி. உதயக்குமார். தன்னுடைய வரிகளுக்கு எஸ்.பி.பி குரல் கொடுப்பார் என்று... ஆம், அந்தப்பாடல் தான் "என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை".

 பின்னாளில்,சவுந்தர்யா என்றொரு நளின நடிகை மற்றும் பலரை திரையுலகுக்கு அறிமுகம் செய்து வைத்தவரும் இந்த ஆடு மேய்த்த சிறுவன் தான்.

கனவுகளையும், லட்சியங்களையும் துரத்திய இயக்குனர் ஆர்.வி. உதயக் குமார், பின்னாளில், சின்ன கவுண்டர், எஜமான், கிழக்கு வாசல், பொன்னுமணி, சிங்கார வேலன், நந்தவன தேரு போன்ற அழகான திரைப்படங்களை  ரசிகர்களுக்கு கொடுத்து வெள்ளித்திரையில் விருந்து வைத்த பெரும் பெருமைக்கு சொந்தக்காரர்.

 லட்சியங்களை அடைய, கடுமையாக போராட வேண்டும் என்பதற்கு ஆக சிறந்த உதாரணம் இயக்குனர் ஆர்.வி. உதயகுமார்.


பிப்ரவரி 22-தர்மம் தலைகாக்கும்

💁1963 ஆம் ஆண்டின் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றிகளில் ஒன்றான "தர்மம் தலை காக்கும்" திரைப்படம் வெளிவந்த தினம் இன்று.

சாண்டோஎம். சின்னப்பா தேவர் தனது தேவர் பிலிம்ஸ் Banner கீழ் இப் படத்தை வெளியிட்டார். வெள்ளித்திரையில் அன்றைய காலத்தில் 100 நாட்களுக்கும் மேல் ஓடி சாதனை படைத்தது .

இப்படத்தில், எம்.ஜி.ஆர் டாக்டர் சந்திரனாக நடித்தார், சமூகத்திற்கு சேவை செய்வதில் நம்பிக்கை கொண்ட ஒரு ஊழலையும் அம்பலப்படுத்துகிறார். படம் ஒரு புலனாய்வு த்ரில்லர்.

முகமூடி அணிந்த ஒரு கும்பல், ஒரு அப்பாவி மனிதனைக் கொலை செய்வதை அவர் காண்கிறார். அவர் அவர்களைப் பிடிக்க முயற்சிக்கிறார், ஆனால் அவர்கள் தப்பிக்கிறார்கள். காவல்துறையினரை அழைத்த பின்னர் அவர் இடத்திற்குத் திரும்பும்போது, ​​உடல் நகர்த்தப்பட்டதைக் கண்டுபிடிப்பார்.

இதற்கிடையில், மணி (அசோகன்) ஒரு பணக்காரனுக்கு (வி.கே.ராமசாமி.) சொந்தமான நிதி நிறுவனத்தில் காசாளராக நியமிக்கப்படுகிறார். மற்றொரு கும்பல் மற்றொரு பணக்காரனை (எம்.ஆர்.ராதா) மற்றும் வி.கே. ராமசாமி பணத்துடன் காரில் பயணம் செய்கிறார்.

சந்திரன் அவர்களுக்கு உதவுகிறார், முந்தைய கொலையில் ஈடுபட்ட குண்டர்களை அவர் அடையாளம் காட்டுகிறார். எம்.ஆர்.ராதாவிடம் பணம் திருட மணி (அசோகன்) ஒரு நாடகத்தை நடத்துகிறார் என்பது தெரியவந்துள்ளது.

பின்னர், சந்திரன் சிவகாமியை (சரோஜா தேவி, எம்.ஆர். ராதாவின் மகள்) காதலிக்கிறார். இருப்பினும், ராதா தனது விருப்பத்திற்கு மாறாக மணியுடன் சிவகாமியின் திருமணத்தை ஏற்பாடு செய்கிறார். மணியால் நடப்பட்ட ஒரு இளம் பெண் (சந்திரா), ராதா மற்றும் சந்திராவின் புகைப்படங்களுடன் சமரசம் செய்யும் நிலையில் ராதாவை, பிளாக்மெயில் செய்ய முயற்சிக்கும்போது மேலும் சிக்கல்கள் வருகிறது.

ஆனால் சிவகாமி, மணியை திருமணம் செய்ய மறுக்கிறார். க்ளைமாக்ஸில் மணி சிவகாமியைக் கொல்ல முயற்சிக்கிறார். ஒரு நீண்ட சண்டைக்குப் பிறகு சந்திரன் அவளைக் காப்aபாற்றுகிறான், அவன் கொலையாளியை அவிழ்த்து விடும்போது, ​​அவன் வேறு யாருமல்ல என்பதை அவன் ஆச்சரியத்தில் காண்கிறான். இறுதியில் என்ன ஆனது என்பதே கிளைமாக்ஸ்.

இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் Music Director கே.வி. மகாதேவன். இந்த படத்தில் கவியரசர் கண்ணதாசன் எழுதிய ஏழு பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ரகம்

 எம்.ஜி.ஆரின் தொழில் வாழ்க்கையின் ஆரம்ப ஆண்டுகளில், தர்மம் தலை காக்கும் மறக்கமுடியாத திரைப்படங்களில் ஒன்றாகும்.

சென்று வாருங்கள் எஸ்.பி.ஜனநாதன்!!!

💁 யார் இந்த இயக்குனர் எஸ் பி ஜனநாதன்? பண்பாட்டிற்கும், கலாசாரத்திற்கும் பெயர் பெற்ற, நெற்களஞ்சியம் இருக்கும் புகழ்பெற்ற தஞ்சாவூர் மாவட்டத்த...