Friday, February 19, 2021

பிப்ரவரி 20. "காதல்" படம் ரிலிஸான தினம் இன்று.

👉 திரை பொக்கிஷம் - காதல் :

எதார்த்தத்தை சொல்லும் இயக்குனர்களில் அதி முக்கியத்துவம் வாய்ந்தவர் பாலாஜி சக்திவேல். நிகழ் காலத்தில் நடந்ததை, வெள்ளித்திரையில் கற்பனை கலந்து காட்டுவதில் கைதேர்ந்தவர். 

அப்படி இவர் உருவாக்கின ஒரு படைப்புதான் 2004-ஆம் ஆண்டில் வெளிவந்த "காதல்" திரைப்படம்.

ஒரு ரயில் பயணத்தில் சந்தித்த நபரின் உண்மை கதையை மையமாக வைத்து, பல கற்பனை காட்சிகளை சேர்த்து, இப்படத்தை பாலாஜி சக்திவேல் உருவாக்கினார்.

ஒரு திரைப்படம் உள்ளுணர்வுகளை தூண்ட வேண்டும். படம் முடிந்து வெளியே வரும்பொழுது ஒரு திருப்தி ஏற்பட வேண்டும் என்று தான், ஒரு சினிமா ரசிகனின் எதிர்பார்ப்பாக இருக்கும். ஆனால் இப்படத்தை பார்த்து விட்டு வெளியே வரும்பொழுது, கனத்த இதயம் ஏதோ செய்து கொண்டே இருந்தது பல ரசிகர்களுக்கு....

ஏழை மெக்கானிக்காக நாயகன், ஜாதி மற்றும் பணபலம் மிக்க நபரின் மகளாக நாயகி. இருவருக்குமிடையே காதல் முளைத்து, மதுரையிலிருந்து சென்னை சென்று திருமணம் செய்து கொள்கின்றனர். 

நாயகியின் உறவினர்கள் சமாதானம் பேசி, காதல் ஜோடியை மதுரைக்கு அழைத்து செல்கின்றனர். அங்கு என்ன நிகழ்ந்தது என்பது தான், பரபரப்பூட்டும் கிளைமாக்ஸ் காட்சிகள்.

ஜோஷ்வா ஸ்ரீதர் என்ற இசையமைப்பாளர், இப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிறார். முதல் படம் என்று தெரியாத அளவு இசையில் ஸ்கோர் செய்து இருப்பார்.

எல்லாவற்றிற்கும் மேலாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் எளிமையான தரமான படங்களை தயாரிக்க விரும்பி, எஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தை துவக்கினார். அதன் முதல் திரைப்படம் இந்த "காதல்".

கனத்த காதலின் ஒருமித்த உணர்வை சொல்ல கீழ்காணும் இந்த ஒரு பாடல் போதுமானது. காதலின் வலிகளை , தனது வரிகளில் விதைத்தவர் பாடலாசிரியர் நா. முத்துக்குமார். 

வளையாமல் நதிகள் இல்லை.

வலிக்காமல் வாழ்க்கை இல்லை!!!

 பிப்ரவரி 20-2021-சனி கிழமை , மாசி மாதம் 8-ந்தேதி!

💁 வரலாற்றில் இன்று!!!

👉 1987 - அசாமில் இருந்து அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் தனி மாநிலமாக உருவான தினம் இன்று. 

ஆம். தனக்கு பிறந்த குழந்தையை காக்க போராடும் ஒரு தாயை போல இந்தியாவும், மாற்றான் குழந்தையை தனது குழந்தை என தட்டிப்பறிக்கும் மனோபாவத்தில் சீனாவும் இயங்கும் நிலை தான் இந்த அருணாச்சல பிரதேசத்திற்கு தற்போது இருக்கிறது. 

அதன் ஒரு பகுதியாக 1962-ஆம் ஆண்டு இந்திய- சீன போர் மூண்டது. காரணம், இயற்கை எழில் கொஞ்சும் இம்மாநிலத்தின் நிலப்பரப்புகள். இம்மாநிலத்தின் அழகை எடுத்துரைக்கும் 3 முத்தான புகைப்படங்கள். 



இந்த மாநிலத்தை கைப்பற்ற சீன இராணுவம் எவ்வளவோ போராடி வருகிறது. ஆனால், பலம் பொருந்திய இந்திய இராணுவம், கைப்பிடி மண்ணை கூட எடுக்க அனுமதிக்காமல் கெத்து காட்டி வருகிறது. அசாமில் இருந்த இந்த மாநிலம், 1987 ஆம் ஆண்டு இதே நாளில் அதாவது, பிப்ரவரி 20-ந்தேதி தனி மாநிலமாக உருவானது. இதன் தலை நகர் இட்டா நகர்.

திரும்பும் திசை எங்கும் மலையின் வாசம் மட்டுமே தெரிந்த இம்மாநில மக்களுக்கு, கடலின் வாசம் பழக்கமில்லை. ஆம், கடல் பகுதி என்பதே இம்மாநிலத்தில் இல்லை. 

பழங்குடி மக்கள் அதிகம் காணப்படும் இம்மாநிலத்தில், கலாச்சாரம் உலக அளவில் கண்ணை கவரும் வகையில் இருக்கிறது. பார்ப்பதற்கும், தெரிந்து கொள்வதற்கும் இம்மாநிலத்தில் அதிகம் இருக்கிறது. 

இந்தியாவின் பறந்துபட்ட கலாச்சாரத்தை உலகுக்கு எடுத்து உரைக்கும் அற்புதமான மாநிலம் அருணாச்சல் பிரதேசம்.


👉 இன்றைய நாளில் பிறந்த இந்த நாளுக்கு பெருமை சேர்த்தவர் :

👉 1944-பிப்ரவரி 20. விஜய நிர்மலா - தென்னிந்திய திரைப்பட நடிகை, இயக்குனர். அவரை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள். 

  • ஆண் இயக்குனர் களே படங்களை இயக்க போராடும் இன்றைய சூழலில், ஒரு பெண்ணாக நின்று கிட்டத்தட்ட 44 படங்களை இயக்கியுள்ளார்.

  •  2002-ல் அதிக படங்களை இயக்கிய பெண் இயக்குனர் என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

  • தமிழில் "எங்க வீட்டு பெண்" திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனார்

  • 44 படங்களை இயக்கியுள்ள விஜய நிர்மலா, 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

  • டித்துக் கொண்டே இருக்கும்போது, "சாட்சி" திரைப்படம் தான் இவருக்கு இயக்குனராகும் விருப்பத்தை  ஏற்படுத்தியது.

தற்போது கலை துறையில் பெண் இயக்குனர்களாக வலம் வரும், லஷ்மி ராமகிருஷ்ணன், சுகாசினி மணிரத்னம், மதுமிதா, சுதா கொங்காரா, கிருத்திகா உதய நிதி, ஹலிதா ஷமின், ஐஸ்வர்யா தனுஷ், ஸ்ரீபிரியா, சவுந்தர்யா ரஜினிகாந்த், போன்றவர்களுக்கும், கலை துறையில் கால் பாதிக்க துடிக்கும் வருங்கால பெண் இயக்குனர்களுக்கும், விஜய நிர்மலா ஆக சிறந்த உதாரணம். 

19 பிப்ரவரி - மூன்றாம் பிறை

திரைப் பொக்கிஷம் - மூன்றாம் பிறை

👉 பிப்ரவரி 19 - "மூன்றாம் பிறை" திரைப்படம் வெளிவந்த தினம் இன்று. 

கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி, சில்க் ஸ்மிதா, காந்திமதி என பெரிய நட்சித்திரங்கள் புடை சூழ இத்திரைப்படம் உருவானது. பல்வேறு சிறப்புக்களை கொண்ட இந்த திரைப்படத்தில் இருந்து சில சுவாரஸ்யமான தகவல்கள் இதோ உங்களுக்காக...

  • சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பத்மஸ்ரீ Dr.கமலஹாசனுக்கு பெற்றுத் தந்தது இத்திரைப்படம்.\

  • கவியரசர் கண்ணதாசன் பணியாற்றிய கடைசி திரைகாவியம்.

  • இத்திரைப்படத்தின் இயக்குனர் பாலுமகேந்திரா, சிறந்த இயக்குனர் என்பதை தாண்டி, சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற வகையில், அவருக்கு தேசிய விருதை பெற்று தந்தது. 

  • திரையிட்ட பெரும்பாலான இடங்களில், 300 நாட்களுக்கும் மேலாக ஓடி சரித்திர சாதனை படைத்தது. 

  •  தெலுங்கில் 'வசந்த கோகிலா' எனும் பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளிவந்தது.

👉 "கண்ணே கலைமானே" பாடல் உருவான விதம் :

கண்ணே கலைமானே பாடல் உருவான விதம் குறித்து, இப்படத்தின் இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா அவர்கள், ஒரு இடத்தில் குறிப்பிட்ட சில விடயங்கள்...

கவியரசர் கண்ணதாசன் போல, உலகத்தில் வேறு யாராலும் அவ்வளவு வேகமாக ஒரு பாடலை எழுதி விட முடியாது. "கண்ணே கலைமானே" பாடல் பதிவு செய்வதற்கு முன்பு, கவியரசர், இயக்குனர் பாலுமகேந்திரா, நான்,ஒரு அறைக்குள் இருக்கிறோம். 

படத்தில் பாடல் எங்கு வருகிறது என்கிற சூழலை, இயக்குனர் அவர்கள் விவரிக்க, நான் ஏற்கனவே போட்டு வைத்த மெட்டிற்கு, ஒரு ஒரு வரிகளாக சொல்லிக்கொண்டே வருகிறார் கவியரசர். அடுத்தடுத்த நிமிடங்களில் இந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் அருவியாய் கொட்டுகிறது... 

இப்படி நான் வாசிக்க, எனக்கு ஏற்ப அவரும் வரிகளை போட்டுக்கொண்டே வருகிறார். கொஞ்ச நேரத்தில் நிறைவு பெற்றது பாடல்.  அது தான் நாம் இப்பொழுது கேட்டு ரசிக்கும் கண்ணேகலைமானே என்கிற அற்புதமான காவிய பாடல்...



பிப்ரவரி 18-2021-வியாழகிழமை, மாசி மாதம் 7-ந்தேதி!

💁 வரலாற்றில் இன்று!!!

👉 1930-ஆம் ஆண்டு புளூட்டோவை, அறிஞர் கிளைட் டோம்பா கண்டுபிடித்த தினம் இன்று!

சரி, இதற்கு ஒரு சீரிய வரலாறு உள்ளது. நாம் வாழும் இந்த பூமியையும் சேர்த்து பல்வேறு கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. இந்த வரிசையில் சூரியனுக்குப் பக்கத்தில் சுற்றி வரும் முதல் கோள் புதன். 3-வதாக நாம் வாழும் பூமி சூரியனைச் சுற்றி வருகிறது. 

இதேபோல 8-வது கோளாக சுற்றி வரும் நெப்டியூனுக்கு அடுத்ததாக புதிய கோள் ஒன்று 1930-ம் ஆண்டு இதே நாளில், அமெரிக்க வானியல் அறிஞரான கிளைட் டோம்பா-வால் கண்டுபிடிக்கப்பட்டது. 

இது குறித்த தகவல் வெளியானதும், புதிய கோளுக்கு பலரும் பெயர் சூட்ட முன்வந்தார்கள். இங்கிலாந்தை சேர்ந்த வெனிடியா என்ற 11 வயது சிறுமி, கிரேக்க பாதாள உலக கடவுளின் ரோமானிய பெயரான ‘புளூட்டோ’என்ற பெயரை தனது தாத்தா மூலமாக பரிந்துரை செய்தாள். அப்படித்தான் 9-வது கோளுக்கு ‘புளூட்டோ’என்ற பெயர் வந்தது.

ஆனால், 2006-ம் ஆண்டு ஆகஸ்ட் 24 அன்று கூடிய வானியல் அறிஞர்கள், சூரிய மண்டலத்தின் 9-வது கோளாக இருந்த புளூட்டோவை ‘குறுங்கோள்’ அல்லது ’குள்ளக்கோள்’ என்று சொல்லி தகுதி இறக்கம் செய்துவிட்டார்கள். 

👉 1957 - பசிபிக் பெருங்கடலின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு நாடான நியூசிலாந்தில் மரண தண்டனை கடைசி முறையாக நிறைவேற்றப் பட்ட தினம் இன்று. நியூசி என்றவுடன், பிரதமர் ஜெசிக்கா ஆண்டர்சன், கிவி பறவை, கிரிக்கட் வீரர் பிரண்டன் மெக்குல்லம் ஆகியோர் மட்டுமே நினைவுக்கு வரவேண்டாம். அங்கு மரண தண்டனை இல்லை என்பதும் இனி நினைவில் கொள்ளுங்கள். 

👉 1959  - நேபாளத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

👉 1992 - கும்பகோணம் கும்பேசுவரர் கோயிலில் மகாமக குளத்தில் இடம்பெற்ற நிகழ்வில் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா கலந்துகொண்ட போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 60 பேர் வரை உயிரிழந்தனர்.

👉 2014 - இராஜிவ் காந்தி கொலை வழக்கு: முன்னாள் இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முருகன், சாந்தன்,  பேரறிவாளன்  ஆகியோருக்கு  விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்தது.


💁 இந்த நாளில் பிறந்து, இந்த நாளுக்கு சிறப்பு சேர்த்தவர்கள்!!!

👉1836 – இராமகிருஷ்ணர், இந்திய ஆன்மிகத் தலைவர்

சீடரான விவேகானந்தரே பெரும் ஞானியாய் இருக்கும் போது, அவரின் குருவான ராமகிருஷ்ணர் எப்படி இருந்திருப்பார். ஆம், அனைத்து மதங்களும் போதிப்பது, ஒரே இறைவனை அடையும் வெவ்வேறு வழிகளே... என்பதை தன் அனுபவங்கள் மூலம் உணர்ந்து, அதையே வலியுறுத்தியவர் தான் இராமகிருஷ்ணர். அவரின் பிறந்த தினம் இன்று. 

அவரின் பல பொன்மொழிகளில் என்னை ஈர்த்தவை.... 

"ஒரு கெட்ட பழக்கத்தைவிட வேண்டும் என்றால், ஒரு நல்ல பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு தீவிரமான முயற்சி தேவை" 


👉 1860 - மா. சிங்காரவேலர் - விடுதலைப் போராட்ட வீரர் 

தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட், இந்தியாவில் முதன்முதலில் மே தினத்தைக் கொண்டாடியவர், இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் மாநாட்டுக்குத் தலைமை தாங்கியவர் எனப் பல பெருமைகளை ஒருங்கே பெற்ற  பொதுவுடைமைவாதி தோழர் மா.சிங்கரவேலர் பிறந்த தினம் இன்று. 

அவரின் பல சொற்பொழிவுகளில் என்னை ஈர்த்தவை.... 

தனது கடைசி மாநாட்டில் இவ்வாறாக உரையாற்றுகிறார். "இந்த மாநாட்டில் உங்கள் முன்  நின்று கொண்டு உரையாற்றும் போது எனக்கு வயது 84. தொழிலாளி வர்க்கத்திற்காக குரல் கொடுக்க வந்துள்ளேன். இந்த மேடையிலேயே நான் இறந்து போனால், இதை விட பெருமை எனக்கில்லை" என்று பேசி அரங்கை திரு வைத்தவர். 

இவர்கள் போக, இந்த நாளில் யாரெல்லாம் பிறந்துள்ளீர்களோ, உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

சென்று வாருங்கள் எஸ்.பி.ஜனநாதன்!!!

💁 யார் இந்த இயக்குனர் எஸ் பி ஜனநாதன்? பண்பாட்டிற்கும், கலாசாரத்திற்கும் பெயர் பெற்ற, நெற்களஞ்சியம் இருக்கும் புகழ்பெற்ற தஞ்சாவூர் மாவட்டத்த...