💁 யார் இந்த இயக்குனர் ஆர் வி உதயகுமார்?
கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தனது தந்தையுடன் மாடு மேய்த்துக் கொண்டிருந்தான் இந்த சிறுவன். பக்கத்தில் ஏதோ கோவில் திருவிழாவில், "ஆயிரம் நிலவே வா" என்ற எம்ஜிஆரின் பாடல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்த நேரம் அது. அட பாடல் அருமையாக இருக்கிறது. யாரோ ஒரு புது குரல் கேட்கிறது என்று அந்த சிறுவன் நினைத்து கொண்டிருந்த போதே, பாடல் முழுவதுமாக ஓடவில்லை. யாரோ நிறுத்தி விட்டார்கள். வேதனை பொங்க அங்கலாய்த்துக் கொண்டே ஆடுகளை மேய்க்க தொடங்கினான் இந்த சிறுவன்.
ஒரு மாதம் கழித்து, மீண்டும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தாயகம் திரும்பிய போது, தனது பாடல் வரிகளை கொடுத்து, பாடலை பாட கேட்டுக் கொண்டுள்ளார். வரிகளை படித்து விட்டு ஆரத்தழுவி கொண்டாராம் எஸ்.பி.பி.
மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது, துளியும் யோசித்து இருக்க மாட்டார் ஆர்.வி. உதயக்குமார். தன்னுடைய வரிகளுக்கு எஸ்.பி.பி குரல் கொடுப்பார் என்று... ஆம், அந்தப்பாடல் தான் "என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை".கனவுகளையும், லட்சியங்களையும் துரத்திய இயக்குனர் ஆர்.வி. உதயக் குமார், பின்னாளில், சின்ன கவுண்டர், எஜமான், கிழக்கு வாசல், பொன்னுமணி, சிங்கார வேலன், நந்தவன தேரு போன்ற அழகான திரைப்படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வெள்ளித்திரையில் விருந்து வைத்த பெரும் பெருமைக்கு சொந்தக்காரர்.


No comments:
Post a Comment